harshmitra

harshmitra

Recent Articles by harshmitra

HARSHAMITRA STAFFS BIRTHDAY CELEBRATION.

14.04.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் Maintanance  department – ல்  பணிபுரியும் Mr.Barath  babu அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

HARSHAMITRA KIDNEY CARE CENTER – DIALYSIS UNIT INAUGURATION CEREMONY.

14.04.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் டயாலஸிஸ் பிரிவு துவங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய துணைத் தலைவரும் ,டாக்ட்ர்.பி.சி.ராய்  தேசிய விருது பெற்றவருமான டாக்டர். எம்.எஸ்.அஷ்ரஃப் அவர்கள் , மூத்த சிறுநீரக மருத்துவர்களான டாக்டர்.கிரி,

HARSHAMITRA STAFFS WENT TOUR TO KODAIKANAL ON 15.04.2023.

15.04.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் ஊழியர்கள் சுமார் 40 பேர் கொண்ட குழு kodaikanal -க்கு சுற்றுலா சென்றனர் .

CANCER SCREENING CAMP ON 09.04.2023 AT PERAMBALUR

9.4.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனை , ரோஸ் கார்டன் அறக்கட்டளை மற்றும் பெரம்பலூர் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமினை  மாண்புமிகு  போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சிவசங்கரன்  அவர்கள் துவக்கி வைத்தார் . இதில் 400-க்கும் மேற்பட்ட

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளிடையே புற்றுநோய் பற்றிய தொடர் விழிப்புணர்வு உரைகளை நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நமது மதிப்பிற்குரிய நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் திரு.கோவிந்தராஜன் அவர்களும் மருத்துவர் திருமதி சசிப்பிரியா கோவிந்தராஜன் அவர்களும் நிகழ்த்தி வருகிறார்கள். அதன் தொடர் நிகழ்வாக இன்று 09.02.2023 புதன்கிழமை ஜமால் முகமது கல்லூரியில் நமது மதிப்பிற்குரிய நிர்வாக இயக்குனர் திருமதி சசிப்ரியா கோவிந்தராஜன் அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். மேலும் நமது மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் கருநல மருத்துவர் திருமதி ரேவதி சந்திரசேகரன் அவர்கள் மாணவிகளுக்கு வளர் இளம் பருவ உடல்நலன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். திருச்சி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி வைஷ்ணவி தேவி அவர்கள் பெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். கல்லூரியில் பயிலும் 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் அவசியத்தை எடுத்துக்கூறி புற்றுநோய் இல்லாத பாரதம் படைக்க உறுதி ஏற்றனர். நிகழ்வின் இறுதியில் கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி முதல்வர் ஹாஜி S.இஸ்மாயில் முஹைதீன் அவர்கள் நமது நிர்வாக இயக்குனர் திருமதி சசிப்பிரியா அவர்களுக்கும் மகப்பேறு மற்றும் கருநல மருத்துவர் திருமதி ரேவதி சந்திரசேகர் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்வை கல்லூரியின் பேராசிரியர் திரு சையது அவர்களும் திருமதி ஆயிஷா அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ராவின் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மேற்கொண்டு வரும் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தி புற்றுநோயை கண்டுகொள்ளும் விதத்தில் மாணவ மாணவிகளின் பங்கு என்ன ??? என்பதை தெளிவுபடுத்தும் விதமாக கல்லூரிகள் தோறும் புற்றுநோய் விழிப்புணர்வு என்ற தலைப்பில் எமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் ஜி கோவிந்தராஜ் வர்தனன் சார் அவர்கள் மற்றும் மருத்துவர் திருமதி சசிப்பிரியா கோவிந்தராஜ் அவர்கள் இருவரும் சேர்ந்து திருச்சி மாவட்டம் முழுதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்கள் .பல நிறுவனங்கள் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும் இந்த புற்றுநோயை ஒழிக்க முதல் படி மாணவர்களே !!! இளைய சமுதாயமாகிய மாணவர்கள் இந்த நிலையில் புற்றுநோயை பற்றி தெரிந்துக்கொண்டால் அதை எதிர்காலத்தில் ஒழிக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக தேர்ந்தெடுத்து கல்லூரிகள் தோறும் புற்றுநோய் பற்றிய கருத்தரங்கு நிகழ்த்தி வருகிறார்கள் .இந்த நிகழ்வின் ஒன்பதாவது நாளாகிய இன்று(9/2/2023) எமது புற்றுநோய் அறுவை சிகிச்சையில் தங்கப் பதக்கம் வென்ற மருத்துவர் கோவிந்தராஜ் வர்தனன் அவர்கள் திருச்சி கோணலையில் அமைந்துள்ள திருச்சி இன்ஜினியரிங் கல்லூரியில் 300 மாணவ மாணவிகள் அடங்கிய விழாவில் பேருரை ஆற்றினார்கள் நமது மருத்துவர் அவர்கள் பேருரையின்போது தன் வாழ்க்கையில் தன் தந்தையிடம் கற்றுக் கொண்ட அனுபவங்களை பெற்ற கஷ்டங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள் நான் பட்ட கஷ்டம் இனிமேல் எந்த குடும்பமும் படக்கூடாது என்ற நல்ல உயரிய நோக்கத்தில் தன் உரையின் துவக்கத்திலேயே கூறி அனைவரையும் புகையிலை போதை பொருட்கள் மதுபானங்கள் போன்ற பழக்கங்களை இந்த வயதினர் கற்றுக் கொள்வது இயல்பு எனவே அதை தயவு கூர்ந்து தடுக்க வேண்டும், அதோடு இல்லாமல் அந்தப் பழக்கங்களில் இருப்பவர்களை அந்த பழக்கத்தை விட்டு வெளிவர தேவையான அறிவுரைகளை கூற வேண்டும் என்று கூறினார்கள். பிற்காலத்தில் புற்றுநோயை அழிக்க வேண்டும் என்றால் இன்றே நீங்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு என்ன பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்பதையும் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க இன்னும் சில புற்று நோய்கள் பெண்களுக்கு வராமல் தடுக்க மேற்கண்ட பாப்ஸ்மியர் மற்றும் ஸ்கிரீனிங் டெஸ்ட்களை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள் பொதுவாக ஒன்பது வயது முதல் 22 வயது கொள் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியினை கண்டிப்பாக அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் ஆண்களும் பெண்களும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக அவர்களுக்கு புரியும் படியாக கூறினார்கள் இன்று வரை இந்த தடுப்பூசியை போடவில்லை எனில் உடனே போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தி இந்த ஊசியினால் கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வயிறு பகுதிகள் ஏற்படும் புற்றுநோய் போன்ற புற்று நோய்களை தடுக்கலாம் எனவும் கூறினார்கள் .ஆண்களுக்கு பரவும் புற்று நோய்கள் ஆகிய ஓரல் கேன்சர் எனப்படும் வாய் பகுதி புற்றுநோய் தொண்டை மற்றும் வயிற்றில் ஏற்படும் புற்றுநோய் உணவு குழாயில் ஏற்படும் புற்றுநோய்கள் நுரையீரலில் ஏற்படும் புற்று நோய்கள் மலக்குடலில் ஏற்படும் புற்று நோய்கள் வெகுவாக புகைப்பதினால் வருகிறது இதை தடுக்க அனைவரும் புகைக்கக் கூடாது ஆண்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாக கூறி விழாவில் நிறைவுக்கு கொண்டு வந்தனர் பின்பு கல்லூரியின் முதல்வர் அவர்களால் நமது நிர்வாகி அவர்கள் கௌரவிக்கப்பட்டனர் . பின்பு நமது நிர்வாகி அவர்கள் கல்லூரியின் முதல்வர் அவர்களை கௌரவிக்க தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிவடைந்தது நன்றி